கணணி என்கின்ற தகவல் தொழில்நுட்ப சாதனையும் இணையம் என்கின்ற அதன் பாய்ச்சலும் இணைந்து உலகை உள்ளங்கைக்குள் சுருக்கி அறிவையும் தகவல்களையும் அனைவருக்கும் பொதுவாக்கி வரும் அற்புதத்தை நாம் நாளாந்தம் அனுபவித்து வருகின்றோம் என்றால் மிகையாகாது.
இதன் விளைவாக இன்று நாம் எமது ஏராளமான தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள இணையத்தையே நம்பி நிற்கின்றோம். இன்று இணைய வங்கி முறை அனைவராலும் சர்வ சாதாரணமாக பயன்படுத்தப்படுகின்றது. அது மட்டுமல்லாமல் பொருட்களை கொள்வனவு செய்ய உறவினர் நண்பர்களுடன் தமது உணர்வுகளை பகிர்ந்து கொள்ள என இன்றைய தொழில்நுட்பம் பரந்து விரிந்து கிடக்கின்றமை எவராலும் மறுக்க முடியாத உண்மையாகும்.
0 comments:
Post a Comment